6)வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத
போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன்
முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே
யாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தை கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலகனைக்
காக்கொணாதோ யெழில் பெரிய அண்டங்களடுக்கா யமைத்த நீயென்
குறைகள் தீர்த்தல் பெரிதோ
9)தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியை யாண்டுமென்ன சேயர்களிருந்தென்ன குருவா இருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஒயாது மூழ்கினும என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலுமுன் கடைக்கண் பார்வை அது போதும்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
10)இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ இதுவே உன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனை யடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்றுமில்லை. உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்க வருவாய்,