ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா (2)
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் அருள் சேரும் (ரக்க்ஷ)
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அளிப்பவள் அவளே சக்தி
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கெளரி மனோஹரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி சிவசிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ)
கருணையில் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்
வல்வினை ஓடும் பழவினை ஓடும் அருள் மழை பொழிபவள் நாளும்
நீல நிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் தருபவள் (ரக்க்ஷ)
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் அருள் சேரும் (ரக்க்ஷ)
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அளிப்பவள் அவளே சக்தி
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கெளரி மனோஹரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி சிவசிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ)
கருணையில் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்
வல்வினை ஓடும் பழவினை ஓடும் அருள் மழை பொழிபவள் நாளும்
நீல நிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் தருபவள் (ரக்க்ஷ)